Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கொலை செய்துவிடுவேன்’ - லவ் டார்ச்சர் கொடுத்த வாலிபர்

’கொலை செய்துவிடுவேன்’ - லவ் டார்ச்சர் கொடுத்த வாலிபர்
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (15:59 IST)
தன்னைக் காதலிக்க மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை நெல்லை மாவட்டத்தின் விஜயநாராயணம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுருகண்ணன் (22). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.
 
பள்ளி மாணவி தினம் தோறும் பள்ளிக்குச் செல்கையில், சிவகுருகண்ணன், அவரைப் பின் தொடர்ந்து சென்று தன்னைக் காதலிக்குமாறு தொல்லை கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை மாணவி ஏற்க மறுத்துள்ளார்.
 
ஆனாலும், சிவகுருகண்ணன் தினமும் பின் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து, சிவகுருகண்ணனை மாணவியின் பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.
 
இதனால், ஆத்திரமடைந்த சிவகுருகண்ணன் மாணவியின் தந்தை இல்லாத நேரம் பார்த்து, மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த மாணவியையும் அவரது தாயையும் மோசமாகி பேசி உள்ளார். மேலும், மாணவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
 
இது குறித்து மாணவியின் தந்தை விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு பதிவு செய்து சிவகுருகண்ணனைக் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனுடன் பிரிவுக்கு காரணம்: கவுதமி டுவிட்டரில் விளக்கம்