Publish Date: Wed, 06 Apr 2022 (10:08 IST)
Updated Date: Wed, 06 Apr 2022 (10:10 IST)
உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு! ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவல்!
உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை சேலம் அருகே உருவாக்கப்பட்டு வந்த நிலையில் அந்த சிலைக்கு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள முத்து மலை அடிவாரத்தில் புதிதாக 146 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டது
இந்த சிலைதான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்த முருகன் சிலைக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது குடமுழுக்கு நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டர் மூலம் முருகன் சிலை மீது மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்