Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை!

இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை!
, திங்கள், 23 நவம்பர் 2020 (07:21 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அதில் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பாக பெண்களுக்கு அனுமதி சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண் பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் சாதாரண நேரத்தில் மட்டுமே பெண்கள் பயணிக்க அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
சாதாரண நேரம் என்பது காலை 7 மணி வரையிலும், அதன் பின் காலை 10 மணி முதல் 4.30  மணி வரையிலும் அதன் பின் மாலை 7.30 மணிக்கு மேல் உள்ள வரை நேரங்களிலும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் இந்த நேரங்களில் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண்கள்  மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அளவில் கொரோனா: பாதிப்பு 5,89,67,519, குணமானோர் 4,07,56,269!