Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன் சொன்ன ஒரு வார்த்தை – தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை!

கணவன் சொன்ன ஒரு வார்த்தை – தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை!
, ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (08:34 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னையும் தனது மகனையும் கொடுமைப்படுத்திய கணவனைக் கொலை செய்த கணவனைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டபிரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவருக்கு கௌரி என்ற மனைவியும் ஆகாஷ் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். மது அடிமையான ராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துத் தொல்லை தந்துள்ளார். மேலும் ஆகாஷ் தன்க்குப் பிறக்கவில்லை எனக் கூறி கௌரியை சித்ரவதை செய்துள்ளார்.

இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தொல்லை கொடுத்த ராஜுவை கௌரி அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தலைமறைவாகப் போலிஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த கொலை சம்மந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் கௌரிக்கு இப்போது ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது திருவள்ளூர் நீதிமன்றம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சிபுரத்தில் பொது இடத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை – சொத்துத் தகராறு !