Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடுறீங்களா.. தீக்குளிக்கவா? – நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:06 IST)
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி போடாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக பெண் மிரட்டியது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளைக்கு 60 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள சென்ற பெண் தனக்கு தடுப்பூசி வழங்கப்படாத விரக்தியில் தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரை அதிகாரிகள் சிலர் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments