Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் சனி, ஞாயிறு ஊரடங்கு? ஆலோசனை நடப்பதாக தகவல்!

தமிழகத்தில் சனி, ஞாயிறு ஊரடங்கு? ஆலோசனை நடப்பதாக தகவல்!
, வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (11:08 IST)
தமிழகத்தில் தினமும் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசின் சுகாதாரத் துறையால் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
குறிப்பாக வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது அல்லது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இன்னும் சிறிது நேரத்தில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு! – மக்கள் ஏமாற்றம்!