Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி… கள்ளக்காதலனோடு சேர்ந்து போட்ட திட்டம்!

கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி… கள்ளக்காதலனோடு சேர்ந்து போட்ட திட்டம்!
, திங்கள், 9 நவம்பர் 2020 (11:00 IST)
மனைவி தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களோடு சேர்ந்து கணவனைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பள்ளியை சேர்ந்தவர் முத்துகாளை. இவரது மனைவி கலையரசி மற்றும் மகன்கள் ஹரிஷ் குமார் மற்றும் கிஷோர் குமார். கணவன் மனைவி இருவரும் கட்டட கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கலையரசிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சேதுபதியுடன் மறை உறவு இருந்துள்ளது. அதைக் கண்டுபிடித்த முத்துக்காளை மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களும் உறவு தொடர்ந்துள்ளது.

இதையடுத்து குடும்பத்துடன் மனைவியின் ஊருக்கு சென்ற முத்துக்காளையை நான்காம் தேதி முதல் காணவில்லை எனப் போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார் கலையரசி. அது சம்மந்தமாக போலிசார் விசாரணை நடத்த மேலப்பட்டி எனும் பகுதியில் காமாட்சிபுரம் அருகே உள்ள கிணற்றில் முத்துகாளை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக போலிஸார் கலையரசியிடம் விசாரணை நடத்த காதலன் சேதுபதியுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார் கலையரசி. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

200 நாட்கள் தேர்தல் பரப்புரை…. உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் திட்டம்!