Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் கோபமாக சொன்ன வார்த்தை… அதனால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (09:53 IST)
ராமநாதபுரத்தில் கணவன் மதிய உணவு தயார் செய்ய சொல்லி கோபமாக பேசியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மேல்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் (27) மற்றும் குருதேவி (20) . இவர்களுக்குக் கடந்த ஆண்டு திருமணம் ஆகி இப்போது 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய பொன் முருகன் மதிய உணவை சீக்கிரமாக தயார் செய்ய சொல்லி மனைவியிடம் கோபமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த குருதேவி கணவர் கிளம்பியதும் தன் மீதும் குழந்தையின் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.

இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரையுமே காப்பாற்ற முடியவில்லை. இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments