Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் உயிரைப் பறித்த நாய்..! வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலி.!!

Senthil Velan
வியாழன், 11 ஜனவரி 2024 (11:44 IST)
மார்த்தாண்டம் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால், ஸ்கூட்டரில் சென்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து, படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பெத்தேல்புரம் படு வாக்கரையை சேர்ந்தவர் ஜாண் சுஜன்லால். இவருடைய மனைவி பிரபா செலின் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது ஸ்கூட்டரில் மார்த்தாண்டம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் பிரபா செலின் நிலை தடுமாறி ஸ்கூட்டரிலிருந்து  கீழே விழுந்தார். அவருக்கு இடது கால், இடது கண் புருவம், தலை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.  அங்கிருந்தவர்கள் அவரை  மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ALSO READ: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..! ஓபிஎஸ் மனு தள்ளுபடி.! சின்னம், கொடி பயன்படுத்த தடை.!!

பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பிரபா செலின் பரிதாபமாக  இறந்தார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments