Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெடிகுண்டை வைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

Advertiesment
bihar
, சனி, 7 அக்டோபர் 2023 (14:11 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சிறுவர்கள் பந்து என  நினைத்து வெடிகுண்டு வைத்து விளையாடி அது வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பொருள் பந்து போன்று இருந்ததால், அதை எடுத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில், 4 சிறுவர்கள் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெடிகுண்டு என தெரியாமல், பந்து வடிவிலான அதை விளையாடியபோது, அது தரையில் விழுந்து வெடித்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்ரனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!