Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராபிக் பிரச்சனை இல்லை.. பெட்ரோல் தேவையில்லை.. இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்..!

Mahendran
வியாழன், 11 ஜனவரி 2024 (11:43 IST)
இந்தியாவில் விரைவில் பறக்கும் கார் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு தற்போது நடந்து வரும் நிலையில் இந்த மாநாட்டில் ஜப்பான் நிறுவனம் காட்சிப்படுத்திய பறக்கும் கார் அனைவரையும் கவர்ந்துள்ளது.  
 
மூன்று சீட்டுகள் கொண்ட இந்த காரில் இரண்டு பயணிகள் மற்றும் ஒரு டிரைவர் என மூன்று பேர் பயணம் செய்யலாம். அலுமினியம் உலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார்கள் 1400 கிலோ எடை இருக்கும் என்றும் மணிக்கு 100 கிலோ மீட்டர் பறக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதற்கு பெட்ரோல் தேவை இல்லை. இது ஒரு மின்சார கார் என்பதால் ஒருமுறை சார்ஜ் செய்து 15 கிலோ மீட்டர் வரை செய்ய செல்லலாம்.  தொலைதூர பயணங்களுக்கு ஏற்றது இல்லை என்றாலும் குறுகிய தூரத்தில் செல்வதற்கு இந்த காரை பயன்படுத்தலாம் என்றும்  இந்த கார் போக்குவரத்து நெருக்கடியான நகரங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 ஜப்பானில் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சுசுகி நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்கை என்ற நிறுவனம் இந்த காரை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments