Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு ஒப்பாரி வைத்து பெண்கள் அஞ்சலி - வீடியோ

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (16:29 IST)
முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தி.மு.க தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மணவாசி சமத்துவபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, வீரராக்கியம் ஆர்.எஸ். ஆகிய பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என்று ஏராளமானோர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மணவாசி சமத்துவபுரம் பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். 
- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments