Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியாகராஜன் மீதும் மீடூ புகார்: ''பொன்னர் சங்கர் படத்தின் போது நடந்தது என்ன?

தியாகராஜன் மீதும் மீடூ புகார்: ''பொன்னர் சங்கர் படத்தின் போது நடந்தது என்ன?
, சனி, 20 அக்டோபர் 2018 (20:54 IST)
நடிகர் பிரசாந்த் நடிப்பில் கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் இயக்குனர் தியாகராஜன் இயக்கிய திரைப்படம் 'பொன்னர் சங்கர்'. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு இயக்குனர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமுக வலைத்தளத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

'பொன்னர் சங்கர்' படத்தில் தான் போட்டோகிராபராக பணிபுரிந்ததாக கூறும் பிரித்திகா மேனன் என்ற இளம்பெண் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 'மீடூ' ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார். தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் அவர் காட்டியதாகவும், அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் கூறியதாகவும், அந்த சமயத்தில் தனக்கு உடம்பெல்லாம் கூசியதாகவும் தெரிவித்துள்ளார்.

webdunia
மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டியதாகவும் இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மீடூ ஹேஷ்டேக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு எப்போது பருவமழை?