Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாஸ் அமைதியாக இருப்பது ஏன்? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (08:48 IST)
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ கடந்த சில மாதங்களாக அடிக்கடி பரபரப்பான செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் திடீரென சில நாட்களாக அவரது சத்தமே இல்லை.
 
இதுகுறித்து புலனாய்வு பத்திரிகை ஒன்று விசாரித்ததில் சமீபத்தில் திமுக நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டார். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், திமுகவின் போட்டி சட்டமன்றத்தில் எப்படி கலந்து கொள்ளலாம்/ இதனால் கருணாஸை எம்.எல்.ஏவை பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாஸ் அமைதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க விவகாரம் ஒரு வருடத்திற்கு மேல் இழுத்து கொண்டு இருக்கும் நிலையில் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ ஆன கருணாஸ் அந்த பதவியை இழக்க விரும்புவாரா? அதனால்தான் அவர் அமைதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments