Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Advertiesment
Annamalai

Mahendran

, சனி, 4 ஜனவரி 2025 (15:36 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனமுடைந்த மாணவியை அவமானப்படுத்த, திமுக அரசு செய்யக்கூடாத காரியம் செய்துள்ளது.
 
பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஞானசேகரன் அந்த மாணவியை வீடியோ பதிவு செய்து மிரட்டியுள்ளார். இவ்வளவு குடும்ப கொடுமையான குற்றவாளியை போலீசார் கண்காணிக்காமல் இருந்தது ஏன்? ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள்.
 
கடந்த ஆண்டுகளிலும் இதே போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுபோல இருந்தும் அவரை பாதுகாக்க முயல்வது வெட்கக்கேடானது.
 
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இமேஜ் பாதுகாப்பதில் திமுக தீவிரமாக இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் இருவருமே மௌனமாக இருப்பது ஏன்?
 
இந்த விவகாரத்தில் நீதிக்காக போராடுபவர்களை திமுக ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளது என்று அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை