Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டாசு ஆலைகளை கண்காணிக்க ஏற்கனவே வலியுறுத்தினோம்! ஆனா நடவடிக்கை எடுக்கல! - பாஜக அண்ணாமலை!

Advertiesment
Annamalai

Prasanth Karthick

, சனி, 4 ஜனவரி 2025 (14:00 IST)

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.

 

இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்? அப்படி என்ன வருமானம்?