Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சரமாரி கேள்வி..!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சரமாரி கேள்வி..!
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:59 IST)
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என  தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வாகைகுளம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு நாளாவது 50% கட்டண வசூல் செய்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
 
சுங்க சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது, ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள், அப்பொழுது இடைக்கால தடை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த ஊசலாட்டமும் இல்லை.. திமுகவுடன் கூட்டணி தொடரும்: வன்னி அரசு அறிவிப்பு