Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் இந்த ரூபி மனோகரன்? தேர்தலுக்கு ஏத்த வெய்ட் பார்ட்டியா?

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (08:53 IST)
ஒருவழியாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி, மேலிடத்தின் ஒப்புதலுடன் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக - காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. 
 
அதன்படி விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸும் ஒருவழியாக வேட்பாளரை அறிவித்துவிட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், உட்பட 26 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்த நிலையில் ரூபி மனோகரனைத் தேர்வு செய்துள்ளது காங்கிரஸ் தலைமை.
 
கட்டுமானத் துரையில் ஆர்வம் கொண்ட ரூபி மனோகரனுக்கு 60 வயது ஆகிறது. ரூபி பில்டர்ஸ் குழுமத்தை துவங்கியவர் இவர்தான். 10 ஆண்டுகளுக்கு மேல் விமான நிலைய ஆணையத்தில் பணியாற்றிய முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் தனது கட்டுமான நிறுவனத்தின் மூல 22 ஆண்டுகளில் 185 குடியிருப்புகளுக்கு மேல் கட்டியுள்ளார். 
காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக இருக்கும் இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவராம். நீங்களும் பில்டர் ஆகலாம் என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர், கட்டுமானத்துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 
 
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார், அதோடு லயன்ஸ் கிளப்பிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments