Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? திணறும் தலைமை!

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? திணறும் தலைமை!
, செவ்வாய், 10 மார்ச் 2020 (11:23 IST)
திமுகவில் உட்கட்சி தேர்தல் துவங்குவதற்குள் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது. 
 
திமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்த க. அன்பழகன் கடந்த சனிக்கிழமை காலமானதை அடுத்து விரைவில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது. 
 
கட்சியின் விதிப்படி பொதுச்செயலாளர் ஒருவரை உடனடியாக தேர்தெடுக்க வேண்டும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் மூலமாக நிரப்பப்பட வேண்டும். அதிலும் தற்போது திமுகவில் உட்கட்சி தேர்தல் துவங்கியுள்ளது. இதனால் இதற்கு முன்பாகவே பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரை தேர்ந்து எடுக்க உள்ளதாக கூறப்படுக்கிறது. 
 
குறிப்பாக திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன், திமுக மக்களவை எம்பிக்கள் தலைவராக இருக்கும் டிஆர் பாலு, திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கேஎன் நேரு, விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் எ.வ.வேலு ஆகியோர் திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது. 
 
எனவே குறுகிய காலத்தில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என விளங்காமல் கட்சி தலைமை குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கடிச்சா கொரோனா வராது? மூக்குமுட்ட குடிச்சு உயிரை விட்ட 27 பேர்