Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்தலால் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா?

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:10 IST)
சிபிஎஸ்சி தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தேர்தலால் தாமதம் ஆகுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் மொத்தம் 35 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர் 
 
வழக்கமாக சிபி சிபிஎஸ்சி தேர்வுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் நிலையில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால் தேர்வு தாள் திருத்துதல் உள்ளிட்ட பணி தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாநில திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மே இரண்டாவது வாரத்தில் திட்டமிட்டபடி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்பது குறித்து அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை 
 
கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் பணிகளால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by  Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments