Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையை அடுத்து தஞ்சைக்கும் உள்ளூர் விடுமுறை.. எந்த தேதியில் தெரியுமா?

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:04 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மதுரையை அடுத்து தஞ்சாவூருக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் என்பவர் தெரிவித்துள்ளார்.

 உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் ஏப்ரல் 20-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் தீபக் அறிவித்துள்ளார்

இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு எந்த நாளில் வேலை நாளாக இருக்கும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 சதவீதம் வரி.. உடனே வழிக்கு வந்த கொலம்பியா.. டிரம்ப் அதிரடியால் மாற்றம்..!

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது: வேங்கை வயல் மக்கள் மனு..!

ChatGPTஐ தூக்கி சாப்பிட்ட சீனாவின் DeepSeek AI! - அப்படி என்ன வசதி இருக்கு?

தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பழனி முருகன் கோவிலில் கட்டணம் இல்லாத தரிசனம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments