Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார விடுமுறை: கிளாம்பாக்கத்தில் இருந்து 500+ சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (09:28 IST)
வார இறுதி மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 500+ சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் போதிய அளவு பேருந்துகள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை அதை தொடர்ந்து வரும் முகூர்த்த நாட்கள் காரணமாக ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் கிளாம்பாக்கத்திலிருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 750 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதுபோல ஞாயிற்றுக்கிழமை அன்று திரும்ப சென்னை வர பல மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments