Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்.. இந்தியாவில் முதல்முறை..!

Siva
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (09:01 IST)
இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவைக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிஷிகேஷ் பகுதியில் இருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இந்த ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் மலைப்பகுதியில் உள்ள நோயாளிகளை சாலை வழியில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்வது சவால் ஆனதாக இருப்பதால் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து விரைவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவை ஆரம்பமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments