இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
திங்கள், 20 ஜனவரி 2025 (07:49 IST)
இன்று தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்று  5 மாவட்டங்களில்இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பின்னும், தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
 
நேற்று, 19 மாவட்டங்களில் மழை பெய்ததாக தகவல் வெளியானது. இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமாரி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சில இடங்களில் நம் விதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments