Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: தினகரன் நம்பிக்கை

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (22:17 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி இறுதியாகிவிடும் என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி ஒருபுறமும், திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்னொரு புறமும் தயாராகி வரும் நிலையில் தினகரன் ஒரு தனி கூட்டணியை உருவாக்கி வருகிறார். அவரது கூட்டணியில் ஒருசில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அதிமுக - பாஜக, திமுக-காங்கிரஸ் கூட்டணிகளை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும், அமமுகவுக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்கு பிறகு மாற்றியும் பேசும் கட்சியாக திமுக இருக்கும் என்பதால் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments