Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க போட்டது நாடகம்னா.. அதுல நடிச்ச நீங்க யாரு? - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கிடுக்குப்பிடி!

Prasanth Karthick
வெள்ளி, 7 மார்ச் 2025 (09:20 IST)

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக நாடகம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவு குறித்து திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றியது. இதில் அதிமுகவும் திமுகவுடன் ஆதரவாக தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து வாக்களித்தது. ஆனால் அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுவதாக கூறியிருந்தார்.

 

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்து பேசிவிட்டு, நாடகமாடியதாக கூறுகிறார். நாங்கள் ஆடியது நாடகம் என்றால் அந்த நாடகத்தில் உங்களுக்கு காமெடி வேடமா? வில்லன் வேடமா? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தை எந்த குறையும் சொல்ல முடியாததால் அதிமுகவினர் இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments