Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை விட எங்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம்: தமிழிசை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (10:43 IST)
தமிழ் தமிழ் என்று கூறி வரும் திமுகவினர்களை விட பாஜகவினர்களுக்கு தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.



 
 
தமிழகத்தில் படிப்படியாக மூன்று மொழி கொள்கையை பாஜக திணிப்பதாகவும், தமிழுக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் திமுக கடுமையாக எதிர்க்கும் என்றும் சமீபத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டாலினை விட பாஜகவினருக்கு தமிழ் மொழி மீது மரியாதையும், மதிப்பும் உள்ளது என்றும், ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். 
மேலும் டெங்கு ஒழிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெங்குவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments