Publish Date: Tue, 08 Mar 2022 (19:25 IST)
Updated Date: Tue, 08 Mar 2022 (19:29 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரதான் மந்திரி சாலை திட்டத்தில் போடப்பட்ட சாலைகள் தண்ணீரில் கரைவதாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என்ற பகுதியில் உள்ள தாலூகா ஏகப்பெருமங்களூர் கிராமத்தில் பிரதான் மந்திரி சாலை திட்டம் அமைக்கப்பட்டது. இந்தத் தார் சாலை தண்ணீரில் கரைவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தி புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.