Publish Date: Tue, 08 Mar 2022 (19:07 IST)
Updated Date: Tue, 08 Mar 2022 (19:19 IST)
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதை அடுத்து பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மே மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு முதல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.