Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
, வியாழன், 30 நவம்பர் 2017 (17:10 IST)
தொடர் மழையின் காரணமாக மேட்டுர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1116 கனஅடியிலிருந்து 1403 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.99 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 38.07 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டாவிற்கு 4000 கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை வரை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்காய விலையை குறைக்க முடியாது: உணவு துறை மந்திரி தகவல்