Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு
, புதன், 29 நவம்பர் 2017 (11:48 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல்குவாரிகளை இன்று முதல் ஆறு மாதங்களுக்கு மூட மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். 
 
தமிழகத்தில் வேறு எந்த மணல் குவாரிகளையும் புதியதாக திறக்க கூடாது. வருங்கால தமிழக சந்ததியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி இதனை கண்காணிக்கலாம்
 
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என்பதாலே மணல் குவாரிகள் மூடப்படுகிறது.
 
இவ்வாறு நீதிபதி ஆர்.மாதவன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் ஜெயில் உறுதி; தினகரனை தடுக்கும் நடராஜன்