Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டேங்கர் லாரிகளைத் தொடர்ந்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலைநிறுத்தம் அறிவிப்பு

டேங்கர் லாரிகளைத் தொடர்ந்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலைநிறுத்தம் அறிவிப்பு
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (17:41 IST)
நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடர்பாக விதிக்கப்பட்ட புதிய சட்டத்தை நீக்கக்கோரி டேங்கர் லாரி உரிமையாளர்களை அடுத்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 ஆம் தேதி வரைமுரையின்றி நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கும் முக்கியமானத் தீர்ப்பை அறிவித்தது. அதில் ‘சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்தும் வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் முன்பு கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையாக இந்த தடையை நீக்க வேண்டுமெனவும் மேலும் கனிமவளப் பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் விநியோகித்து வந்த 4100 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனால் உருவாகும் குடிநீர் தட்டுபாட்டை ஈடு செய்ய மாற்று வழிகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும் அவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள தண்ணீர் கேன் உற்பத்தியாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுப்பு