Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
, வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:44 IST)
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.

 
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் தென்தமிழக கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் சீற்றமாக இருப்பதால் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கடல் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்ளிக் டாய்லெட்டில் வைபை, ஏடிஎம், டிவி வசதி: ஆச்சரியப்படுத்தும் சீனா