Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடூர கொரோனா: விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் பலி!

Webdunia
சனி, 15 மே 2021 (08:55 IST)
விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. 

 
விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப்பிற்கு கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 
 
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், விசிக மாநில பொருளாளர் மு முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீர வணக்கம்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments