Publish Date: Tue, 12 Oct 2021 (10:54 IST)
Updated Date: Tue, 12 Oct 2021 (10:57 IST)
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கினாலும் ஒரு சில இடங்களில் சில குளறுபடிகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த தேர்தலில் ஒரு சில வினோதங்கள் நடந்துள்ளது வாக்குப்பதிவு என்னும் அதிகாரிகளை ஆச்சரியம் அளித்துள்ளது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள், அந்த வாக்காளர் அட்டையை மீண்டும் சம்பந்தப்பட்ட் வாக்காளரிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
siva
Publish Date: Tue, 12 Oct 2021 (10:54 IST)
Updated Date: Tue, 12 Oct 2021 (10:57 IST)