Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரக உள்ளாட்சி தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை என்பதால் பலத்த பாதுகாப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை என்பதால் பலத்த பாதுகாப்பு!
, திங்கள், 11 அக்டோபர் 2021 (19:34 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி காட்சி மூலம் பதிவு செய்யப்படுகிறது என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
மேலும் வாக்கு எண்ணும் பணியில் உள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களை தவிர பொதுமக்களுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி இல்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாபை அடுத்து கேரளாவிலும் மின்வெட்டு? மின் துறை அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு