வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

Siva
செவ்வாய், 4 நவம்பர் 2025 (18:22 IST)
இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி' (SIR) தொடக்கத்திலேயே தோல்வி அடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
 
கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், இந்த நடைமுறை "சர்வாதிகார போக்குடன் நடைமுறைக்கு உதவாத வகையில்" இருப்பதாக குற்றம் சாட்டினார்.
 
சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களில் வாக்காளர்கள் காலை 10 மணிக்கு வீடுகளில் இல்லாததால், வாக்குச்சாவடி அலுவலர்கள் படிவங்களை வழங்க முடியாமல் திரும்புகின்றனர்.
 
2002/2005 பட்டியலின் பழைய தரவுகள் மற்றும் 2024 பட்டியல் முடக்கப்பட்டதால், அலுவலர்களால் களப்பணியை சரியாக செய்ய முடியவில்லை.
 
இத்தகைய காரணங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட வாய்ப்புள்ளதால், இந்த திருத்த பணியை நிறுத்திவிட்டு, 2024 பட்டியலை அடிப்படையாக கொண்டு சுருக்கமுறை திருத்தம் செய்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments