Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊடகங்களின் தவறை ஊடகத்திடமே தைரியமாக சுட்டிக்காட்டிய விவேக்!

ஊடகங்களின் தவறை ஊடகத்திடமே தைரியமாக சுட்டிக்காட்டிய விவேக்!
, ஞாயிறு, 23 ஜூன் 2019 (18:31 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல் குறித்த செய்திகளுக்கு முன்னணி ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையாக இந்த தேர்தலை மிகைப்படுத்தும் ஊடகங்கள் இந்த தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க காலை ஆறு மணி முதல் தேர்தல் நடைபெறும் பள்ளியில் தவமிருந்தன
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விவேக் ஊடகங்களின் இந்த தவறை அவர்கள் முன்பே நாசுக்காகவும் தைரியமாகவும் சுட்டிக்காட்டினார். நடிகர் சங்க தேர்தல் என்பது 2000 பேர் உறுப்பினராக உள்ள ஒரு அமைப்பு. இந்த தேர்தல் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருவது குறித்து மகிழ்ச்சியே. அதேபோல் இன்று தண்ணீர் பிரச்சனை மிக அதிகமாக உள்ளது. இதற்காக பல தன்னார்வலர்கள் தாங்களே மக்களை திரட்டி ஏரி, குளங்களை தூர்வாரி வருகின்றனர். அதேபோல் மழை நீர் சேகரிப்பு செய்யும் பொதுமக்கள் அதுகுறித்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
எனவே ஊடகங்களாகிய நீங்கள் நடிகர் சங்க தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தண்ணீர் பிரச்சனைகளுக்கும் கொடுத்து அதுகுறித்த செய்திகளையும் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் விவாதங்கள் கிடையாது: பாமக ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு