Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசு கொடுத்தால் பெட்ரோல் குண்டு வீசும் வினோத்! – போலீஸார் தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:24 IST)
சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் காசுக்கு வேலை செய்பவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை தி நகரில் கமலாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு நேரத்தில் 3 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி மர்ம நபர் கமலாலயம் மீது வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வினோத் காசு வாங்கி கொண்டு பெட்ரோல் வீசும் நபர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் டாஸ்மாக் மீதும், 2017ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்குகளில் வினோத் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பாஜக அலுவலகம் மீது குண்டு வீச யாரேனும் சொன்னார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments