Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கு அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார்: தமிழக வணிகர் சங்க பேரவை

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (20:21 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று மட்டும் 1407 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சென்னையில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அவர்கள் ’சென்னையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் அரசு அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தினால் கூட கடைகளை அடைத்து அரசுகளுக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் 
 
எனவே சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், வணிகர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதும், எத்தனை நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறதோ, அத்தனை நாள் கடைகள் எதுவும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments