Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வரை சந்தித்த விக்கிரமராஜா: இரண்டே இரண்டு கோரிக்கைகள்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (12:19 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் சற்று முன் சந்தித்த இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தற்போதைய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஊரங்கு அறிவிப்பின் போது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று முதல்வரை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் சில நிபந்தனைகளுடன் ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாகவும் எனவே 21ம் தேதி நீட்டிக்கப்படும் ஊரடங்கின் போது அறிவிக்கப்படும் தளர்வுகளில் ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மால்கள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பது சந்தேகமே என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments