Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலம் தாழ்த்தினாலும் ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி.. விஜயகாந்த் அறிக்கை..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:52 IST)
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் வழங்கினாலும் கவர்னருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார் 
 
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார். 
 
அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுவதற்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தடுக்கப்படும். 
 
இந்த மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் முன்கூட்டியே ஒப்புதல் வழங்கி இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இருப்பினும் காலம் தாழ்த்தினாலும் தற்போதாவது ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறேன். இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments