Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகன்களின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கேப்டன்... விரைவில் கெட்டி மேளம்!!

மகன்களின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கேப்டன்... விரைவில் கெட்டி மேளம்!!
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:58 IST)
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது இரு மகன்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
விஜய்காந்த் - பிரேமலதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் சமீப காலமாக அரசியல் களமிறங்கியுள்ளார். அவரை அவ்வப்போது தேமுதிக கூட்டங்களில் காண முடிகிறது. இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் உள்ளார். 
 
இந்நிலையில் 29 வயதாகும் விஜயபிரபாகரன் நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருகிறாராம். அதேபோல் இரண்வது மகன் சண்முக பாண்டியனும் தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறாராம். 
 
இவர்களது இருவரின் காதலுக்கும் விஜய்காந்த் - பிரேமலதா சம்மதம் தெரிவித்துள்ளனராம். எனவே விரைவில் விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் ஒலிக்கும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு ஊழியர்களுக்கு முன்பணம் 10 ஆயிரம்! – ஊழியர்கள் மகிழ்ச்சி