விஜயதரணிக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி! பொன்னாருக்கு கவர்னர் பதவியா?

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (12:48 IST)
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த விஜயதரணி போட்டியிட போவதாகவும் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி திடீரென சமீபத்தில் பாஜகவில் இணைந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்க தற்போது திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது அநேகமாக அவரது ஆளுநர் பதவி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் விஜய் வசந்த் மற்றும் விஜயதாரணி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதக இருப்பதால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக கருதப்படும் என்று கூறப்படுகிறது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments