கரூர் துயர சம்பவம்.. விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனை..!

Siva
திங்கள், 29 செப்டம்பர் 2025 (16:17 IST)
கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
 
சம்பவம் நடந்த பின் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த விஜய், இன்று காலை தனது பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்து, மாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு அவர் செல்கிறார்.
 
கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், கரூரில் ஏற்பட்ட துயரம் குறித்து ஆழ்ந்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் உதவிகள் வழங்குவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பது, மற்றும் கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் முடிவெடுக்கப்படலாம்.
 
கரூர் விபத்திற்கு பிறகு, விஜய் முதன்முறையாக கட்சி அலுவலகத்திற்குச் செல்வது, அரசியல் வட்டாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம், கட்சியின் எதிர்கால பயணத்திற்கான ஒரு தெளிவான வியூகம் வகுக்கப்படலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் கூட்டநெரிசல்: வீடியோ ஷேர் செய்தவர்களை தேடி வரும் காவல்துறை?

கரூரில் சதி நடந்திருந்தால் மூடி மறைச்சிடுவாங்க! சிபிஐ விசாரணை வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

டெல்லியில் அதிகாலை நடந்த கோர விபத்து.. 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி..!

தவெக தொண்டர்களை காவலர்கள் தாக்கிய வீடியோ ஆதாரம் உள்ளது! - தவெக வழக்கறிஞர்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடத்த கூடாது: கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments