Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பரிசு காத்திருக்கிறது.. அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு! – சிக்கியது எவ்வளவு?

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (12:19 IST)
தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வெளியான புகாரில் பல அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனை மேலும் பல அரசு அலுவலகங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments