Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய கூட்டாளி கைது

வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய கூட்டாளி கைது
, வெள்ளி, 1 ஜூலை 2016 (10:39 IST)
பண மோசடி விவகாரத்தில் ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் நிறுவன் அதிபர் மதன் கூட்டாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

 
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.
 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
 
இதுதொடர்பாக கடந்த ஒரு மாதமாக மதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மதனின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் விஜய் பாண்டியனை காவல்துறையினர் வியாழனன்று கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி வேன்: 10 மாணவர்கள் படுகாயம்