Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி வேன்: 10 மாணவர்கள் படுகாயம்

Advertiesment
நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி வேன்: 10 மாணவர்கள் படுகாயம்
, வெள்ளி, 1 ஜூலை 2016 (10:35 IST)
உடன்குடி அருகே இன்று நடுரோட்டில் பள்ளி வேன் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.


 

 
உடன்குடியை அடுத்த பரமன்குறிச்சியில் தனியார் மெட்ரிக் பள்ளி வேன் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி நோக்கி சென்றது. தைக்காவூரில் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த வேன் திடீரென்று நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
 
அதில் வேனில் இருந்த 10 மாணவ-மாணவிகள் மற்றும் வேன் கிளீனர் ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகோ விலை போய், மற்றவர்களை பலியாக்கிவிட்டார்: திமுக கடும் தாக்கு