Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியை திமுகவினரே விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (10:11 IST)
திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை என்றும் கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது என்றும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரில் பேருந்து முனையம் அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கினோம் என்றும் ஆனால் திமுக அரசு அந்த நிதியை வீணாக்கி வருகிறது என்றும் தெரிவித்தார். 
 
தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் பணிகள் முறையாக நடக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments