Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூஸ் கடை வழியாக ஓட்டை போட்டு அடகு கடை கொள்ளை! – வேலூரில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (10:44 IST)
வேலூரில் அடகு கடை ஒன்றை வேறு கடை வழியாக வந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த கடையை ஒட்டி குளிர்பான கடை மற்றும் ஏடிஎம்மும் உள்ளது.

இந்த அடகு கடையை கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளை கும்பல் ஒன்று நேற்று இரவு கடையின் பின்பக்க சுவரை துளையிட முயன்றுள்ளனர். ஆனால் கான்கிரீட் கனம் காரணமாக துளையிட முடியவில்லை.

இதனால் அடகுக்கடையை ஒட்டியிருந்த ஜூஸ் கடையின் பக்கவாட்டு சுவரியில் துளையிட்டு கடைக்குள் சென்று அங்கிருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.

காலையில் வந்து பார்த்தபோது அடகுக்கடை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனில்குமார் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments