Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூஸ் கடை வழியாக ஓட்டை போட்டு அடகு கடை கொள்ளை! – வேலூரில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (10:44 IST)
வேலூரில் அடகு கடை ஒன்றை வேறு கடை வழியாக வந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த கடையை ஒட்டி குளிர்பான கடை மற்றும் ஏடிஎம்மும் உள்ளது.

இந்த அடகு கடையை கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளை கும்பல் ஒன்று நேற்று இரவு கடையின் பின்பக்க சுவரை துளையிட முயன்றுள்ளனர். ஆனால் கான்கிரீட் கனம் காரணமாக துளையிட முடியவில்லை.

இதனால் அடகுக்கடையை ஒட்டியிருந்த ஜூஸ் கடையின் பக்கவாட்டு சுவரியில் துளையிட்டு கடைக்குள் சென்று அங்கிருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.

காலையில் வந்து பார்த்தபோது அடகுக்கடை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனில்குமார் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments